fbpx

நோட்..! 30, 31 ஆகிய தேதிகளில்… 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்…! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார் ‌

அதில், எதிர்வரும் 30.08.2023 மற்றும் 31.08.2023 ஆகிய நாட்களில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்திட வேண்டும். மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்டுள்ள தலைப்புகளில் தனிப்பிரிவாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை வட்டார அளவில் நடத்திட வேண்டும்.

வட்டார அளவிலான பிற மன்ற செயல்பாடுகளுக்கான போட்டிகள் குறித்த விவரம் தனியே அனுப்பி வைக்கப்படும். மேலும், 2022- 2023 ஆம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடைபெற்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை எதிர்வரும் 28.08.2023 க்குள் EMIS இணையதளத்தில் பள்ளி Login-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களை பதிவு செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கவும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்து வட்டார அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திட வேண்டும்.

Vignesh

Next Post

மும்பையில் ஒருவருக்கு ஜிகா வைரஸ்!… அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ!

Sat Aug 26 , 2023
மும்பையில் 79 வயது முதியவருக்கு ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த 79 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நோய் பாதிப்பு குறித்து அறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் அந்த நோயாளிக்கு ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பதை […]

You May Like