fbpx

கலைஞர்‌ நூற்றாண்டு விழா முன்னிட்டு.. ஆகஸ்ட் 5-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! ஆட்சியர் அசத்தல் அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு முன்னாள்‌ முதல்வர்‌ டாக்டர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்‌ ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும்‌ நடத்திட அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள படித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌, காஞ்சிபுரம்‌ இணைந்து காஞ்சிபுரம்‌ பச்சையப்பன்‌ மகளிர்‌ கல்லூரியில்‌ 05.08.2023 சனிக்கிழமை அன்று மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமல்‌ 100 க்கும்‌ மேற்பட்ட தணியார்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ திறண்‌ பயிற்சி அளிக்கும்‌ நிறுவனங்கள்‌ கலந்துக்‌ கொண்டு தங்களுக்கான மனித வளதேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்‌. அது சமயம்‌ பட்டதாரிகள்‌, டிப்ளமோ.ஐ.டி.ஐ, 12வது மற்றும்‌ 10ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்‌.

18 முதல்‌ 35 வயது வரை உள்ள வேலை நாடுநர்கள்‌ தங்களுடைய கல்வி சான்றிதழ்கள்‌, பாஸ்போர்ட்‌ அளவிலான புகைப்படத்துடன்‌ 05.08.2023 அன்று காலை 9.00 மணிக்கு காஞ்சிபுரம்‌ பச்சையப்பன் மகளிர்‌ கல்லூரியில் நேரில்‌ வந்து வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொண்டு பயன்‌ பெறுமாறும்‌, ஏதேனும் சந்தேகங்கள்‌ இருப்பின்‌ இது தொடர்பாக, 044-27237124என்ற தொலைபேசி எண்‌ வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

Vignesh

Next Post

முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள்!… எச்சரிக்கை விடுத்த தீயணைப்பு பிரிவு!…

Sat Jul 29 , 2023
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சிலிண்டர்களை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கும் போது அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி சிலிண்டர்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து […]

You May Like