fbpx

”ஒரே நாடு ஒரே தேர்தல்”..!! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிந்தார். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை கலைக்கும் நிலை ஏற்படும். அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Chella

Next Post

”வழக்கை ரத்து செய்யுங்கள்”..!! ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் சென்ற அண்ணாமலை..!!

Wed Feb 14 , 2024
தன் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. கடந்தாண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, சேலத்தைச் […]

You May Like