இந்தியாவில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் முடிந்து ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளன. இதில்இந்திய அணியில் சில மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்தியாவில் டி.20 தொடரில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகின்றது. இதைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி ஒரு நாள் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்தி அணி விவரங்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. டி.20 தொடரில் விளையாடும் நபர்கள் யாரும் ஒருநாள் போட்டியில் இடம்பெறவில்லை . ஆஸ்திரேலியாவில் 16ம் தேதி டி.20 உலகப்போட்டி தொடருக்காக இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள். இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்: ஷிகர் தவான் கேப்டன்) ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்) ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்) , ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், முகேஷ் குமார் , அவேஷ் கான், முகமடது சிராஜ், தீபக் சாஹர்