கூகுளை போல் AI தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை வைத்து தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இணையம் என்பது தற்போதைய வாழ்வில் மிகவும் அவசியமான விஷயங்களில் ஒன்றாகி விட்டது. பள்ளி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் வரை இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையத்தில் தங்களுக்குய தேவையான தகவல்கள் அனைத்தையும் தேடுவதற்கு மக்கள் கூகுள் குரோம் ஐ தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது கூகுள் குரோம் பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்னும் நிலை உள்ளது. கூகுளில் நாம் புகைப்படத்தை கொண்டு தேடுகையில் அது சம்பந்தமான தகவல்கள் பயனர்களுக்கு கிடைக்கும். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்திலும் தற்போது புகைப்படங்களை கொண்டு தேடும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு திறனான AIஇல் புகைப்படத்தை பதிவிடுகையில் அது சம்பந்தமான தரவுகளை பயனர்கள் பெற முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் யூசுப் மெஹ்தி தெரிவித்தார். ஏற்கனவே, AI தொழில்நுட்ப வசதிகளில் பயனர்கள் தங்கள், சந்தேகங்ககள் கேள்விகளை பதிவிட்டால் அதற்கு தகுந்த பதிலை AI தருகிறது.