fbpx

ஆன்லைன் கேம்..!! பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்..!! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!!

ஆன்லைன் விளையாட்டில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ. 58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனால், அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும்” என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி மற்றும் வட்டி, அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆன்லைன் கேம்..!! பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்..!! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!!

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தொடர்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்ததால் வட்டி மற்றும் அபராதத்துடன் பெரிய அளவிலான தொகை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்கள் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. ஆகையால், ஆன்லைன் கேம் மூலம் பணம் வென்றவர்கள் விரைவில் வரியை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

” அமைச்சரே மக்களை கேவலமாக நடத்தும் போது...” பெண்களின் இலவச பயணமும் தொடரும் சர்ச்சையும்...

Thu Sep 29 , 2022
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.. எனினும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கு பெண் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் எரிச்சலூட்டும் […]
தமிழக அரசின் இலவச பேருந்து..!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!!

You May Like