fbpx

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!… பாதுகாப்பு குறித்த வீடியோவை வெளியிட்ட என்பிசிஐ!

வங்கிகளுக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடு செயலிகளுக்கும் (third-party app providers) இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) பாதுகாப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின்படி, பரிவர்த்தனை செயலிகளில் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வீடியோவை ஒளிபரப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று வங்கிகள், வணிக சேவை வழங்குநர்கள் (PSPகள்) மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் வழங்குநர்கள் (TRAPs) ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், NPCI, விழிப்புணர்வு வீடியோவை தங்கள் செயலிகளில் ஒளிபரப்புமாறு கேட்டுக்கொண்டது. ஒவ்வொரு முறையும் பணப்பரிவர்த்தனை செயலியை திறக்கும் பொழுதும்,UPIஐ எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்ற வீடியோ வரவேண்டும் என்றும் அப்படி வீடியோ ஒளிபரப்ப செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான வீடியோ இணைப்பு லிங்க்-ஐ பதிவு செய்யவேண்டும் என்று NPCI கூறியது.

Kokila

Next Post

வதந்தி பரப்பும் நபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்...! திருமாவளவன் கோரிக்கை...!

Mon Mar 6 , 2023
வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட […]
’தனித் தமிழ்நாடு கேட்கும் திருமா’..!! ’தேசவிரோதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள்’..!! பரபரப்பு

You May Like