fbpx

TET: தற்காலிக ஆசிரியர் பணி… மொத்தம் 28,984 பேர் மட்டுமே தகுதி…! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தகவல்…!

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்காது, பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ‘தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம். பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது; பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றும் மேலும் இந்த வழக்கு தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஜூலை 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 1,50,648 பேரில், 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தெரிவித்துள்ளார். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என கூறினார்.

Also Read: தமிழக அரசு சார்பில் படித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை…! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

#TnEducation: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு...! தேர்வுத்துறை அறிவிப்பு

Sun Jul 10 , 2022
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 […]

You May Like