உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷியாவில் படைகளை அணி திரட்ட அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டார். அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களில் 730 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போரிட படைகளை திரட்ட புதின் உத்தரவிட்டார். இந்நிலையில், ராணுவ ஆட்சேர்ப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என கூறி ஏராளமான ரஷியர்கள் வெளிநாடு தப்பிச் செல்கின்றனர். மேலும் ஆங்காங்கே படை திரட்டலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில், 32 நகரங்களில் புதினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்திய 730 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.