fbpx

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்தாண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று காலை விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : பைப்பை திறந்தாலே தண்ணீர் கொதிக்கிறதா..? எப்போதும் குளிர்ச்சியாக இருக்க இதை டிரை பண்ணுங்க..!!

Chella

Next Post

OpenAI இன் ChatGPT மற்றும் Google-இன் ஜெமினி செயலிழந்ததால் இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் புகார்!

Fri May 3 , 2024
நவம்பர் 2022 இல் ChatGPT தொடங்கப்பட்டபோது , ​​அதன் திறன்களைக் கண்டு உலகமே வியந்தது. நீண்ட கட்டுரைகள் எழுதுவது மற்றும் கவிதை இயற்றுவது முதல் எழுதும் பணிகளில் மாணவர்களுக்கு உதவுவது வரை, AI கருவி மெதுவாக மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. இதேபோல், கூகுளின் ஜெமினி (முன்னர் பார்ட் என்று அழைக்கப்பட்டது) ChatGPTக்கு போட்டியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இரண்டு AI சாட்போட்களும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான […]

You May Like