fbpx

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தின் இந்த 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நீலகிரி, தஞ்சை, திருவாரூர் , நாகப்பட்டினம்  ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

 கோவை , திருப்பூர் , ஈரோடு , தருமபுரி , கிருஷ்ணகிரி , கரூர் , நாமக்கல் , சேலம் , திண்டுக்கல் , மதுரை , திருச்சி , அரியலூர், பெரம்பலூர் , கடலூர் , மயிலாடுதுறை , கள்ளக்குறிச்சி , திருப்பத்தூர் , வேலூர், புதுக்கோட்டை , சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

புற்றுநோய்க்கு அற்புத இயற்கை நிவாரணி… முள் சீதாப்பழம்…

Mon Oct 10 , 2022
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. முள் சீத்தாப்பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு […]

You May Like