fbpx

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்..!! இன்று மிக கனமழை..!! இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பா இருங்க..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 18ஆம் தேதியான நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : உங்கள் பான் கார்டில் ஏதேனும் சிக்கலா..? ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Heavy to very heavy rain may occur at one or two places over the hilly areas of Nilgiris and Coimbatore districts and heavy rain at one or two places over the hilly areas of Tirupur, Theni and Dindigul districts.

Chella

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து..!! சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!

Wed Jul 17 , 2024
As the flow of water in Okanagan Cauvery river has increased to 21 thousand cubic feet per second, bathing in the waterfall and river has been prohibited.

You May Like