ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. 28.12.2020 முதல் 31.07.2021 வரை 7 கட்டங்களாக 211 நகரங்கள் மற்றும் 726 மையங்களில் 133 அமர்வுகளில் 15 மொழிகளில் இத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதே போல் 17.08.2022 முதல் 11.10.2022 வரை 5 கட்டங்களாக 1.11 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுடன் 191 நகரங்களில் 33 நாட்களில் 15 மொழிகளில் 551 மையங்களில் 99 அமர்வுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2023 செப்டம்பர் 30 வரை 2,94,115 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களில் 90% க்கும் அதிகமானோர் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவுகளில் உள்ளனர்.2014-15 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் (செப்டம்பர் 23 வரை) 4,89,696 பேர். ரயில்வே ஆட்சேர்ப்பு முகமைகளால் பல்வேறு குரூப் சி பதவிகளுக்கு (நிலை -1 மற்றும் பாதுகாப்பு தொடர்பான பதவிகள் உட்பட) ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.