fbpx

5 நிமிடத்தில் வலியில்லா மரணம்!. இயந்திரம் மூலம் தற்கொலை செய்துகொண்ட பெண்!

Suicide capsule: சுவிட்சர்லாந்தில் சார்கே என்ற நிறுவனம் ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலமாக ஒருவர் 5 நிமிடங்களில் வலியில்லாமல் உயிரிழக்க முடியும். சீல் செய்யப்பட்ட அறைக்குள் நைட்ரஜன் வாயுவை செலுத்தி ஒரு சுவிட்சை ஆன் செய்தால் உள்ளே இருக்கும் நபர் தூங்கிவிடுவார் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் இறந்து விடுவார்.

இந்தநிலையில், வடக்கு சுவிட்சர்லாந்தின் மெரிஷாவுசென் பகுதியில் வனத்துறை அறைக்கு அருகே தற்கொலை கேப்ஸ்யூலை பயன்படுத்தி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொள்வதற்கு உதவியதாக சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புகைப்பட கலைஞர் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

Readmore: இலங்கை பாராளுமன்றம் கலைப்பு!. நவம்பர் 14ல் வாக்கெடுப்பு!. புதிய அதிபர் அனுர குமார திசநாயக அழைப்பு!.

English Summary

‘Suicide capsule’: In a first, woman dies in Switzerland within minutes of pressing ‘death button’

Kokila

Next Post

நேரடி வரி, கலால், சேவை வரி தொடர்பான மேல் முறையீடு தொகை வரம்பு அதிகரிப்பு..!

Wed Sep 25 , 2024
Increase in appeal amount limit related to Direct Tax, Excise, Service Tax

You May Like