fbpx

பாகிஸ்தான் ரயில் கடத்தப்பட்டது ஏன்..? கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை என்ன..? பகீர் பின்னணி…

பலுசிஸ்தான் மாகாணத்தின் பலூச் கிளர்ச்சியாளர்கள் குழு ஜாஃபர் ரயிலை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 450க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பலூச் விடுதலைப் படை (BLA) தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகளை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று அந்த குழு பாகிஸ்தான் ராணுவத்தை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இந்த ரயில் கடத்தல் சம்பவம் இனு பிற்பகல் சிபி மாகாணத்திற்கு அருகில் நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம், உட்கட்டமைபு மீது பல தாக்குதல்களை பலமுறை நடத்தியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள், தங்கள் பகுதியின் செல்வத்திலிருந்து வெளியாட்கள் லாபம் ஈட்டுவதாகக் கூறி, அங்கு பணிபுரியும் சீன பொறியாளர்களையும் குறிவைத்துள்ளனர்.

தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தானில் இருந்து தங்களுக்கான தனி தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே கிளர்ச்சியாளர்களின் எண்ணம் ஆகும். மேலும் பாகிஸ்தான் அரசு பலூச் பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பல தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவின் கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

ஐ.நா.வை அறிக்கையின் படி, , ஜனவரி 2024 நிலவரப்படி, 2011 முதல் பாகிஸ்தானில் மொத்தம் 10,078 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. பலூசிஸ்தானில் இருந்து 2,752 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 மற்றும் 2017 க்கு இடையில் சுமார் 5,228 பலூச் மக்கள் காணாமல் போனதாக பலூச் காணாமல் போனவர்களுக்கான குரல் என்ற அமைப்பு (VBMP) கூறுகிறது.

பலுசிஸ்தான் தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது மற்றும் நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 44% ஆகும், ஆனால் பாகிஸ்தானின் 240 மில்லியன் மக்கள் தொகையில் 6% மட்டுமே அங்கு வாழ்கின்றனர்.

பலுசிஸ்தான் மாகாணம் ஈரான் மற்றும் தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அரேபிய கடலில் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது.

இயற்கை வளம் நிறைந்த பலுசிஸ்தான்

பலூச் மக்கள் மிகப்பெரிய இனக்குழுவாக உள்ளது, அதைத் தொடர்ந்து பஷ்டூன் இன மக்கள் இருக்கின்றனர். பலூச் பழங்குடியினரின் பெயரால் இந்த மாகாணம் பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர்.

பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த மாகாணம் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) முக்கிய பங்கு வகிக்கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தப் பகுதியில் ஓமன் வளைகுடாவிற்கு அருகிலுள்ள குவாடரில் ஒரு ஆழ்கடல் துறைமுகம் உள்ளது.

1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பலுசிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து, அரசியல் புறக்கணிப்பு, பொருளாதார சுரண்டல் மற்றும் கலாச்சார ஒடுக்குமுறை மீதான கோபத்தால் தூண்டப்பட்ட பல எழுச்சிகளை இப்பகுதி கண்டுள்ளது.

இயற்கை எரிவாயு, நிலக்கரி, தாமிரம் மற்றும் தங்கம் என வளமான பகுதியாக இருந்தாலும் பலுசிஸ்தான் நாட்டின் ஏழ்மையான மாகாணமாகவே உள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு அதன் வளங்கள் அனுமதிக்க வேண்டியதை விட மிகக் குறைவு என்றும், இங்குள்ள மக்கள் தேசிய சராசரியை விட மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்றும் காட்டுகிறது.

இராணுவத்தின் மீதான சமீபத்திய தாக்குதல்கள்

2023 முதல் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், தனது ராணுவ படைகள் மீது பல தாக்குதல்களை கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்ட பிரிவினைவாத பலுச் விடுதலை இராணுவம் (BLA), ஐக்கிய பலுச் இராணுவம் (UBA), பாகிஸ்தான் தாலிபான் மற்றும் பிற போராளிக் குழுக்களால் ராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்களின் கோபத்திற்கு என்ன காரணம்?

பலூச் உரிமைகளுக்காக அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் குழுவான பலூச் யக்ஜெஹ்தி குழு (BYC) கடந்த ஆண்டு குவாடர் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு அணிவகுப்புகளை நடத்தியபோது காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொண்டதால், பலூச் கிளர்ச்சியாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

மேலும், நியூயார்க்கில் டைம் பத்திரிகை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பாகிஸ்தானிய அரசாங்கம் ஆர்வலர் மஹ்ரங் பலோச்சை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதபோது கிளர்ச்சியாளர்கள் மேலும் கோபமடைந்தனர்.

சீனா மீதான கோபம்

இந்தப் பகுதியில் உள்ள சீனத் திட்டங்கள் பலூச் குடியிருப்பாளர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளன. இப்பகுதியில் நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்கள் கண்காணிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இவை பலூச் இளைஞர்களை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றன.

CPEC முக்கியமாக இஸ்லாமாபாத்தில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கும் சீன முதலீட்டாளர்களுக்கும் பயனளிக்கிறது, அதே நேரத்தில் உள்ளூர் மக்களின் தேவைகளையும் நம்பிக்கைகளையும் நிவர்த்தி செய்வதில் சிறிதும் செய்யவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக, பலூசிஸ்தானின் இயற்கை வளங்கள் நியாயமான இழப்பீடு அல்லது அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமல் பறிக்கப்பட்டுள்ளன. பெரிய திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து, சமூகங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், CPEC நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகள் காடுகளை அழித்துள்ளது, விவசாய நிலங்கள் குறைந்து, நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. இதனால் உள்ளூர்வாசிகள் தங்கள் வாழ்க்கை முறையைத் தக்கவைக்க போராடி வருகின்றனர்.

Read More : “ இது நடந்தால் பிணைக் கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள்..” ரயிலை கடத்திய கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எச்சரிக்கை..

English Summary

The incident of hijacking the Zafar train by a group of Baloch rebels in Balochistan province has caused shock.

Rupa

Next Post

தர்பூசணி சாப்பிட ஆசைப்பட்ட சிறுமி; தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர்..

Tue Mar 11 , 2025
school girl was sexually abused

You May Like