fbpx

Whatsapp குழுவில் இருந்து நீக்கியதால் ஆத்திரம்.. அட்மினை ஓட ஓட விரட்டி சுட்டுக்கொன்ற இளைஞன்..!! பகீர் சம்பவம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் தலைநகரான பெஷாவரில், வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த ஒருவர், குழு நிர்வாகியை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் சனிக்கிழமை பெஷாவரின் புறநகரில் உள்ள ரெகியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, முஷ்டாக் அகமது என்ற வாட்ஸ்அப் நிர்வாகி அஷ்பக் கானை குழுவிலிருந்து நீக்கியுள்ளார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வியாழக்கிழமை, இருவரும் தகராறை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டு நேரில் சந்தித்தனர். அப்போது அஷ்பக் முஷ்டாக்கை சுட்டுக் கொன்றார்.

இறந்தவரின் சகோதரர் ஹுமாயூன் கான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் சம்பவ இடத்தில் இருந்தேன், ஆனால் இருவருக்கும் இடையேயான சண்டை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் சகோதரனுக்கும் அஷ்பக்கிற்கும் இடையே ஒரு வாட்ஸ்அப் குழுவில் சில தகராறுகள் ஏற்பட்டன, இதன் காரணமாக அவர் அஷ்பக்கை குழுவிலிருந்து நீக்கிவிட்டார்.

இதற்குப் பிறகு அஷ்பக் கோபமடைந்து என் சகோதரனைச் சுட்டார். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இருவருக்கும் இடையே இருந்த தகராறு பற்றி எதுவும் தெரியாது. அஷ்பக் மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள, கைபர் பக்துன்க்வா , மிகவும் பதட்டமான பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதி பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகிலேயே வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருக்கும் பாகிஸ்தான் தாலிபான்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

Read more:“இனி வாழ்நாளில் பிரியாணி சாப்பிட மாட்டேன்..!” சிக்கன் சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரம்..!

English Summary

Pakistani man shoots dead WhatsApp group admin for removing him from chat

Next Post

உங்கள் வீட்டில் குலதெய்வ பூஜை செய்யப் போறீங்களா..? அப்படினா மறக்காம இந்த மந்திரத்தை சொல்லுங்க..!!

Sun Mar 9 , 2025
How to feel that our family deity has come and settled in our house puja room? In this post, we will see how to invite the family deity into our home.

You May Like