fbpx

பழனி முருகன் கோயிலில் இன்றுமுதல் ஒருமாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது!… கோயில் நிர்வாகம்!

பழனி முருகன் கோயிலில் இன்றுமுதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் தரிசனத்திற்காக வரும் மக்கள் ரோப் கார் அல்லது வின்ச் அல்லது நடைபாதை இவைகளை பயன்படுத்தி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான்.

ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச் சேவையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோப் காரில் உள்ள இரும்பு சக்கரங்கள், மின்மோட்டார்கள், இரும்புக் கம்பி போன்றவை பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

UIDAI எச்சரிக்கை : இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான ஆவணங்களைப் பகிர வேண்டாம்…

Sat Aug 19 , 2023
ஆதார் அட்டையைப் புதுப்பிக்கும் நோக்கத்திற்காக மக்கள் தங்கள் அடையாள அல்லது முகவரி சான்று ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எச்சரித்துள்ளது. தனிநபர்கள் தங்களுடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு UIDAI ஒருபோதும் கேட்பதில்லை என்றும், இதுபோன்ற கோரிக்கைகள் மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) “உங்கள் ஆதாரை மின்னஞ்சல் அல்லது […]

You May Like