fbpx

பீதியை கிளப்பும் எலி காய்ச்சல்..!! ஒரே மாதத்தில் 34 பேர் மரணம்..!!

கேரள மக்களிடையே எலி காய்ச்சல் பரவல் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் கேரளத்தில் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலும் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டுமே இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல், டெங்கு, ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல் மற்றும் ஸ்க்ரப் டைபஸ் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் 2,045 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 402 பேர் எலிக் காய்ச்சலாலும், 1,295 பேருக்கு ஹெபடைட்டிஸாலும், 62 பேர் ஸ்க்ரப் டைபஸாலும், 1,027 பேர் சின்னம்மையாலும், 15,731 பேர் தண்ணீரால் பரவும் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேரும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹெபடைட்டிஸால் 6 பேரும், மூளைக்காய்ச்சலின் அறிகுறிகளுடன் 3 பேரும், ஸ்க்ரப் டைபஸால் இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சலுக்கு ஆரம்பத்தில் இருந்தே உரிய சிகிச்சை அளிக்கப்படாததே எலிக்காய்ச்சல் உயிரிழப்புக்குக் காரணம். அசுத்தமான நீரில் மூழ்கி குளித்து விட்டு, டாக்ஸிசைக்ளின் மாத்திரை சாப்பிடாதவர்களே உயிரிழப்பதாக சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது.

கேரளாவில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொசுக்களின் மூல அழிவை முறைப்படுத்தினால், டெங்குவை ஓரளவு தவிர்க்கலாம். தண்ணீர் தேங்கும் சூழ்நிலையையும் தவிர்க்க வேண்டும். கழிவுநீரில் இறங்குபவர்கள் எலிக்காய்ச்சல் தடுப்பு மாத்திரை சாப்பிட வேண்டும். காலில் காயம் உள்ளவர்கள் அழுக்கு நீரில் இறங்கினால் வைரஸ் விரைவில் உடலை அடையும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.56,000..!! திருமணமாகாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

English Summary

The spread of rat fever is creating tension among the people of Kerala. 34 deaths have been reported in Kerala in the last one month. It has been revealed that most of them are infected with rat fever.

Chella

Next Post

மாதம் ரூ.20,000 பெறலாம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்…

Mon Nov 18 , 2024
Earn Rs.20,000 per month.. Crazy Post Office Scheme for Senior Citizens...

You May Like