சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வாலிபர் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-13-at-16.59.41.jpeg)
அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சத்யாவை, சதீஷ் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, ரயிலில் சிக்கிய சத்யா, சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-13-at-17.07.50.jpeg)
உடல் தனியாக , தலை தனியாக என இருந்த சத்தியாவை ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
![ஒருதலை காதல்..!! இளம்பெண்ணை ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்ட இளைஞர்..!! பரங்கிமலையில் பரபரப்பு](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/pic-1-e1665655853468-1024x625.jpg)
ஒருதலை காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடைபெற்றதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்ட தகவலை அடுத்து பெற்றோர்கள் சதீஷுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.