குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பார்சல் சேவைவை தற்காலிகமாக நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே உள்ளிட்ட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் செல்ல தடை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.