இந்தியாவின் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் நடந்து செல்பவர்கள் மற்றும் சிறுவர்களை கொடூரமாக தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த சிறுவன் சோட்டு (வயது 7) சாலையோரங்களில் சிறு பொருட்களை விற்கும் வேலை பார்த்து வருகிறான். இந்த சிறுவன் கடந்த 16ஆம் தேதி அன்று பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தெரு நாய்கள் திடீரென அவனை துரத்தி தாக்கத் தொடங்கியுள்ளது. இதில், தெரு நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப் பிடித்து கடித்துள்ளது.
இதனால், வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டுள்ளான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தெருநாய்களை துரத்திவிட்டு சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து, வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.