fbpx

பெற்றோர்களே மறந்துறாதீங்க..!! தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

பெற்றோர்களே மறந்துறாதீங்க..!! தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

அந்த வகையில், நடப்பாண்டில் நாளை (ஜனவரி 4) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், “தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜனவரி  4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்திய அளவில் சுகாதார திட்டங்களை முதலில் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் தான் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்களே மறந்துறாதீங்க..!! தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!!

இது தவிர மீண்டும் 9-வது மற்றும் 12-வது மாதங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து தகுதியான குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர்கள் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலர்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chella

Next Post

FAME-2: 300 மின்சாரப் பேருந்து...! மத்திய அரசு செம அறிவிப்பு...! ஊக்கத்தொகை வழங்கப்படும்...!

Tue Jan 3 , 2023
மத்திய கனரகத் தொழில் அமைச்சகத்தின் ஃபேம் இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், நகரங்கள் அல்லது மாநில அரசுகள் 3,538 மின்சாரப் பேருந்துகளுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன என்று மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். அந்த 3,538 மின்சாரப் பேருந்துகளில், இதுவரை மொத்தம் 1,716 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு 400 மின்சாரப் பேருந்துகள்; தில்லி போக்குவரத்துக் கழகத்திற்கு 300 மின்சாரப் பேருந்துகளும், […]

You May Like