கர்நாடக மாநிலம் பெங்களூரு ரிசர்வ் காவல்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் மகேஷ். ஜனவரி 20ஆம் தேதி, அவர் தனது மதிய உணவை முடித்துவிட்டு மாலை 3.30 மணியளவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த வெள்ளை நிற கார் குலுங்கியது. காருக்குள் ஏதோ நடப்பதை உணர்ந்த எஸ்.ஐ. மகேஷ், சம்பவத்தை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு, திடீரென காருக்கு வந்தார்.
காருக்குள் ஒரு பையனும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இருவரும் காரின் பின்புறத்தில் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடும் பூங்கா அருகே இதை செய்யக்கூடாது என எஸ்ஐ மகேஷ் கண்டித்துள்ளார். அப்போது காரில் இருந்து தனது ஆடைகளை சரி செய்து கொண்ட அந்த வாலிபர் டிரைவர் இருக்கைக்கு வந்தார். மேலும், காரின் முன் நின்று கொண்டிருந்த எஸ்ஐ மகேஷ் மீது கார் மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ், பானட்டில் குதித்து காரை நிறுத்தச் சொன்னார்.
ஆனால் காரை ஓட்டி வந்த வாலிபர் திடீரென ரிவர்ஸ் கியர் மற்றும் பிரேக் போட்டதால் மகேஷ் கீழே விழுந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் காருடன் தப்பிச் சென்றார். காரில் இருந்து கீழே விழுந்த மகேஷின் தலை மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. பின்னர், இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த எஸ்ஐ மகேஷ் இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பூங்கா அருகே நடந்த சம்பவம் முழுவதும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.