இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால், பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என அக்கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தியது. கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக் கட்சிகளின் பலம் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.