fbpx

காலக்கெடுவிற்கு முன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தாலும் ரூ.5000 அபராதம்… ஏன் தெரியுமா..?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 6 கோடி வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனினும் உங்கள் வருமான வரிக் கணக்கைச் சரிபார்க்கத் தவறினால், தாமதமாகத் தாக்கல் செய்தால் ₹5,000 அபராதம் விதிக்கப்படலாம். வருமான வரித்துறை கொடுத்த காலக்கெடுவிற்குள் உங்கள் ஐடிஆரைத் தாக்கல் செய்தும் அதைச் சரிபார்க்கத் தவறினால், ரிட்டர்ன் நிராகரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரித்துறை அதன் இணையதளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரிபார்க்கப்படாமல் இருந்தால். அந்த வருமான வரி அறிக்கை செல்லாததாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பதாரர் தகுந்த காரணத்தைக் கூறி சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டால் மன்னிப்புக் கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் மன்னிப்புக் கோரிக்கை வருமான வரி அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், உங்கள் வருமான வரி அறிக்கையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.. அதாவது ஜூலை 31 க்குப் பிறகு நீங்கள் வருமான வரி அறிக்கையை சரிபார்க்க எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.. எனவே உங்கள் வருமானம் சரிபார்க்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்தவுடன், மன்னிப்புக் கோரிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான கால வரம்பை 120 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைத்துள்ளது, அதாவது வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை மின் சரிபார்த்த தேதியை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தேதியாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளது..

Maha

Next Post

400-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்...! டிகிரி முடித்த நபர்களுக்கு PNB வங்கியில் வேலைவாய்ப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்....!

Wed Aug 17 , 2022
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Probationary Officer மற்றும் Management Trainee என 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் […]

You May Like