fbpx

’திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதியம்’..!! முதலமைச்சர் வெளியிட்ட செம குட் நியூஸ்..!!

திருமணம் ஆகதவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால், அறிவித்திருக்கிறார்.

நாடு முழுவதுமே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருமணத்திற்கு பல மாநிலங்களிலும் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். ஹரியானாவில் நிறைய இளைஞர்கள் 40 வயதைக் கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தேடி வருகின்றனர். பல வருடங்களாகவே மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலமாக ஹரியானா இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவிற்குள் காலடி எடுத்து வைத்த வேற்று மாநில மருமகள்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கு கடந்த 2001ஆம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 756 பெண்கள் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு பாலின விகிதம் 879 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவில் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணம் ஆகாதவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிடும் என்றும் உறுதியளித்தார்.

Chella

Next Post

’இவரு தான் அந்த புஷ்பா புருஷனா’..!! ரேஷ்மாவின் 3-வது கணவரை பார்த்துள்ளீர்களா..? அவரே பகிர்ந்த புகைப்படம்..!!

Thu Jul 6 , 2023
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது மாடல் நடிகர் நரேஷ் உடன் படு நெருக்கமாக திருமண தீமில் நடத்திய போட்டோஷூட் […]

You May Like