fbpx

நாடு முழுவதும் 500 இடங்களில்…! ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை…!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை மின்னணு ஆயுட்கால சான்றிதழ் முறையை (டி.எல்.சி) ஊக்குவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்த திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும். இந்த வசதியின்படி, முக அங்கீகார நுட்பம் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டி.எல்.சி உருவாக்கப்படுகிறது. நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட இந்த சிறப்பான தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களை சார்ந்திருப்பதைக் குறைத்தது மற்றும் திறனறி செல்பேசி, அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை மக்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் குறைவான செலவுடையதாகவும் ஆக்கியது.

17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள்/ துறைகள், ஓய்வூதியர் நலச் சங்கங்களுடன் இணைந்து 50 இலட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு 2023 நவம்பர் 30 வரை நாடு தழுவிய இயக்கம் 100 நகரங்களில் 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

Vignesh

Next Post

’உடனே ஸ்பாட்டுக்கு போங்க’..!! அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட முதல்வர்..!!

Wed Nov 15 , 2023
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று […]

You May Like