இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2022 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் 129 நாட்கள் கழித்து, தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில், ஆயிரத்து 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 249, குஜராத் 179, கேரளா 163, கர்நாடகா 121, தமிழகம் 64, டில்லியில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவர் என 3 பேர் நேற்று 915 ஆக அதிகரித்தது.
மொத்த தொற்று பலி 5 லட்சத்து 30 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 526 உயர்ந்து, 5 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 7 ஆயிரத்து 160 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டது. இதுவரை கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.