தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை நீலகிரி, கோவை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 7ஆம் தேதி கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.