ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதிகரித்து வரும் நிலத்தின் விலைகள், பொருள் விலைகள் மற்றும் தொழிலாளர் கட்டணங்களுடன், வீடு கட்டும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் சவாலான அம்சங்களில் ஒன்றாகும். ஆனால், விடாமுயற்சி மற்றும் திட்டமிடல் மூலம் தனிப்பட்ட வீடு கட்டுபவர்கள் (IHBs) ஒட்டுமொத்த கட்டுமானச் செலவுகளில் குறிப்பிடத்தக்க சேமிப்பைச் செய்ய முடியும்.
இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜல்லி, எம் சாண்ட் ஆகியவற்றின் கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், வீடு கட்டுபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜல்லி வகைகளின் விலை ரூ.4,000இல் இருந்து ரூ.3,400ஆக குறைந்துள்ளது. எம் சாண்ட், ஜிஎப்சி ஆகியவற்றின் விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், புதிதாக வீடு கட்டுவோர் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்தனர். கட்டுமானத் தொழிலாளர்களில் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதுவும், சென்னையில் 80% தொழிலாளர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். சம்பள விஷயத்தில் இவர்களுக்கும், உள்ளூர் தொழிலாளர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஏனென்றால், இவர்களுக்கு சம்பளம் குறைவு. இதற்கிடையே, தற்போது கட்டுமானப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளதால், புதிய வீடு கட்டுவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.