fbpx

”மக்களே இனி கொஞ்சம் கவனமா இருங்க”..!! நோய்கள் பரவும் அபாயம்..!! மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த கண்காணிப்பை மார்ச் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் தொகையை கட்ட கிட்னி விற்பனை”..!! போஸ்டர் அடித்த நபர்..!! வைரலாகும் பின்னணி..!!

Tue Feb 28 , 2023
வாடகைக்கு வீடு தேடுவது எந்த அளவுக்கு சிரமமான வேலை என்பதை விட அதனால் சந்திக்கும் சில சமூகம் சார்ந்த இடர்பாடுகளே வேதனைக்குரியதாக இருக்கும். குறிப்பாக, இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் திருமணமாகாதவர், திருமணமானவர் என எவருக்குமே வாடகை வீடு தேடிய சமயங்களிலேயே கிடைப்பதெல்லாம் அரிதிலும் அரிதாகவே இருக்கும். வீட்டு வாடகை கட்டுவதற்காகவே கூடுதலாக சம்பளம் கிடைக்கும் இடத்துக்கு பணிமாற வேண்டுமோ என்ற அளவுக்கெல்லாம் சிந்திக்க வைத்துவிடுகிறது வீட்டு உரிமையாளர்களின் கெடுபிடிகள். குறிப்பாக […]

You May Like