fbpx

மக்களே உஷார்..! ஜூஸ் கசக்குதுன்னு பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். பெரும்பாலமானவர்கள் பிரெஷ் ஜூஸ்க்களை விட கடையில் இருக்கும் ஜூஸ் பாக்கெட்டுகளை தான் அதிகமாக வாங்குகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது, அப்படி வெயிலின் தாக்கம் தாங்காமல் ஜூஸ் வாங்கியவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த பி.க.புரம் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர்கள் சீனிவாசன் மற்றும் நதியா தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகன் பெயர் சரவணன் வயது 4. இவருக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள மாஸா ஜூஸை வாங்கி கொடுத்துள்ளனர். ஆர்வமுடன் ஜூஸை குடித்த சிறுவன் சரவணனுக்கு ஜூஸ் கசக்கி இருக்கிறது. இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் அந்த ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது குட்டி எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஜூஸில் எலி இருந்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் மக்கள் அதிகம் வாங்கும் மாஸா ஜூஸில் எலி இறந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kathir

Next Post

நடை பயிற்சியின் போது, வேகமாக ஓடலாமா……?

Tue Aug 8 , 2023
நடைபயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், அன்றாடம் உடலை வருத்தி பணிகளை செய்யும் நபர்களுக்கு இந்த நடைபயிற்சி தேவைப்படாது. அதேநேரம், ஒரே இடத்தில் இருந்து, பணிகளை மேற்கொள்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நடைபயிற்சி மிகவும் அவசியமாகும். இந்த நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக, உடலில் உள்ள பல்வேறு கலோரிகள் குறைகிறது. ஆகவே, உடல் எடை வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், நடைபயிற்சியின் போது, […]

You May Like