fbpx

மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, “பயணிகளுக்கு இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அந்த நபர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். உடனடியாக தனிமைப்படுத்தும் அறைக்கு சிகிச்சைக்காக சம்மந்தப்பட்ட நபரை அழைத்துச் செல்ல வேண்டும்.

மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

விமானத்தில் இருந்து இறங்கி வரும் பயணிக்கு நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். ராண்டம் முறையில் 2% பயணிகளுக்கு பரிசோதனைக்கு உட்படுத்த செய்ய வேண்டும். பரிசோதனைக்காக மாதிரியை கொடுத்த பின்னர் அந்த பயணிகள் தங்களது வீடுகளுக்கு சொல்லலாம். ஒருவேளை மாதிரி பரிசோதனையில் பயணிக்கு கொரோனா இருப்பது உறுதியானால், அந்த மாதிரியை மேல் ஆய்வுக்காக INSACOG ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நபரை கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

அதேபோல வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம். 12 வயதுக்குட்ட சிறார்களுக்கு ராண்டம் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருவேளை அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சிகிச்சை பெற வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

Fri Dec 23 , 2022
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  தற்போதைய திமுகவின் மக்களவை உறுப்பினராக உள்ள ஆ. ராசா கடந்த 2004 – 2007 வரையிலான காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமான முறையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 […]
ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள்..!! அதிரடி காட்டிய அமலாக்கத்துறை..!! 45 ஏக்கர்..!! மதிப்பு இத்தனை கோடியா..?

You May Like