தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் ரேஷன் கடைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 18) ரேஷன் கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.