fbpx

குடிப்பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகனும்..!! அதிக வருமானம் சம்பாதிக்கனும் என டாஸ்மாக் நினைக்காது..!!

குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும். அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் நியாயமான எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காலி மது பாட்டில்களை விவசாய நிலம் உள்ளிட்டவற்றில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மதுபானத்தை பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் அந்த தொகையை திருப்பி கொடுக்கலாம் என உத்தரவிட்டது. அதன்படி, நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த திட்டம் அமலில் இருக்கிறது.

திருப்பிப் பெறப்படும் பாட்டில்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்த காலம் 2024 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களுக்கான டெண்டர் கோரப்பட்டதில், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் என குறிப்பிடப்பட்டிருந்ததால், அந்த டெண்டரை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளால் திரும்பப் பெறப்பட்ட காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் N.சதீஷ்குமார், D.பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக டெண்டர் அமைந்துள்ளதாகவும், மதுபான கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்க தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பார் இல்லாத இடங்களிலும் புதிய டெண்டர் கோரப்பட்டதால் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால், இது தங்களின் நியாயமான எதிர்பார்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்பட்ட பாட்டில்களை கொள்முதல் செய்யவே மனுதாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பார்களில் விட்டுச் செல்லப்பட்ட பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது என்றும், மனுதாரர்கள் உரிமை பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டாலும், கடைகளில் திரும்பப்பெறப்படும் பாட்டில்கள் மனுதாரர்களுக்குதான் கிடைக்கும் என்பதால், டெண்டர் செல்லும், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம் எனக் கூறி, வழக்குகளை முடித்துவைத்தனர்.

அதேசமயம், நியாயமான எதிர்பார்ப்பு என மனுதாரர் கேட்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்தால், மனுதாரர்கள் நியாயமான எதிர்பார்ப்பு என உரிமை கோர முடியாது என தெரிவித்துள்ளனர். குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும். அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என மனுதாரர்கள், பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்க முடியாது என்றும் உத்தரவில் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பார்களில் சேகரிக்கப்படும் காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது, ரூ.10 தற்போது ரொக்கமாக கொடுப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இனி சம்பந்தப்பட்ட பாரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Chella

Next Post

’நம்மலும் இந்த வீடியோவுல இருக்க மாதிரி பண்ணலாமா’..? 2 மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்..!! விழுப்புரத்தில் பகீர்..!!

Thu Dec 14 , 2023
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் (40) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதற்கு திருவக்கரை பள்ளியில் இருந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் அழைத்துச் சென்றார். அங்கு […]

You May Like