fbpx

மக்களே..!! இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை..!! வாட்ஸ் அப் மூலமே வேலையை முடிக்கலாம்..!! அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு..!!

குடிமக்கள் சேவைகள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை இனி எளிதாக வாட்ஸ்அப் மூலமே பெறலாம் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அரசின் சேவைகள், கட்டணம் செலுத்துதல், இ-சேவை மைய சேவைகள் இனி வாட்ஸ் அப்பில் கிடைக்கும் என்றும் இதனால் இனி மக்கள் இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்..

எளிதான அணுகலை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசு, 34,843 இ-சேவை மையங்கள் மூலம் 260 குடிமக்கள் சேவைகளை வழங்கி வருவதாக அமைச்சர் பிடிஆர் கூறினார். ரூ.3.85 கோடி செலவில், பயன்பாட்டு பில் செலுத்துதல்கள் உட்பட 50 சேவைகள் முதல் கட்டமாக வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இணைய தேவை அவசியமாகிவிட்டதை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டது போல, குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை கேபிள்கள் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவையை மக்களுக்கு கொண்டுச் செல்லப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Read More : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..!! 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!! 3 பேர் படுகாயம்..!!

English Summary

Minister PTR Palanivel Thiagarajan has announced that citizen services, utility bills and services provided through e-service centers can now be easily accessed through WhatsApp.

Chella

Next Post

’பாகிஸ்தானில் ஒரு கோடி பேர் உணவின்றி தவிப்பார்கள்’..!! 'கடுமையான நிதி நெருக்கடி வரும்’..!! பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக வங்கி..!!

Sat Apr 26 , 2025
The World Bank has warned that 10 million people in Pakistan could go hungry this year amid the conflict with India.

You May Like