fbpx

சேலம் மாவட்ட மக்களே..!! செம குட் நியூஸ்..!! இந்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்றும் அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற செப்.17ஆம் தேதி பணி நாளாக செயல்படும். மேலும், கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 9ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வருகிற செப்.2ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Chella

Next Post

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை, சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு..!

Fri Jul 28 , 2023
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பயணம் மேற்கொள்வர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 300 பேருந்துகளும் என மொத்தம் […]
மாநகர பேருந்துகளுக்கு தனியார் ஓட்டுநர்கள் நியமனமா..? திடீர் போராட்டத்திற்கு இதுதான் காரணமா..?

You May Like