fbpx

தமிழக மக்களே உஷார்..!! இன்று மாலை சூறாவளி புயல்..!! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டு உள்ளது. திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே சுமார் 470 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ., காரைக்காலில் இருந்து 670 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்..!! இன்று மாலை சூறாவளி புயல்..!! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்துள்ளது. மேலும் படிப்படியாக இன்று மாலை சூறாவளி புயலாக மாறி டிசம்பர் 8ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளது என்றும் இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதி கனமழை எச்சரிக்கை..!! இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 7 , 2022
அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு […]

You May Like