fbpx

சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல முயன்ற பொதுமக்கள்.. பரிதாப உயிர் சேதம்..!

மிசோரம் மாநில பகுதியில் விமான தளம் அருகே, சென்ற அக்டோபர் 29 ஆம் நாள் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அருகில் உள்ள மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துள்ளனர். இந்த நிலையில் யாவரும் எதிர்பாரத விதமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் , பெட்ரோலை பிடிக்க வந்த பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இதனையடுத்து, விசாரணை செய்த போது டேங்கர் லாரி மத்தியில் ஒருவர் சிகரெட் லைட்டரை பற்ற வைத்து தான் தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது என தெரிய வந்ததுள்ளது. மேலும், அந்த நபரை உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவரை கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

Baskar

Next Post

#கோவை : மர்மான முறையில் தூக்கில் கிடந்தஇளம்பெண்..! அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி.!

Thu Nov 17 , 2022
கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர்.  ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து […]

You May Like