fbpx

நிஃபாவால் நிம்மதியின்றி தவிக்கும் மக்கள்..!! வரும் 24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

நிஃபா வைரஸ் பரவலையடுத்து 24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசிகளை இந்தியா வாங்க உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் மக்கள் முக்ககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிகோட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Chella

Next Post

இவர்கள் அனைவரும் மேற்படிப்பினை தொடர விண்ணப்பிக்கலாம்...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!

Sun Sep 17 , 2023
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர ஆணையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டுதல்கள்(SOP) வெளியிடப்பட்டுள்ளது. அதில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான […]

You May Like