ஹரியானா, ஃபரிதாபாத்தில் மாலை 4.08 மணிக்கு நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தாக்கம் காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.
டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நில அதிர்வு காரணமாக, இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.