பிரேசிலில் ஆண்களை ஈர்க்கும் வகையில் இளம்பெண் ஒருவர், தனது வியர்வை துளிகளை கொண்டு வாசனை திரவியத்தை தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்துவருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்தவர் வனேசா மௌரா (29) என்ற இளம்பெண். இவர் மிகவும் பிரபலமான மாடல் அழகியாகவும் உள்ளார். இவர் தற்போது தனது வியர்வை துளிகளை கொண்டு வாசனை திரவியம் தயாரித்துள்ளது. இது, ஆண்களை ஈர்க்கிறது மற்றும் “கவர்ச்சியாக” மணக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும், ஆண்களை ஈர்க்க விரும்பும் எவருக்கும் இந்த வாசனை சரியானது என்றும் இளம்பெண் கூறுகிறார். இயற்கையான வாசனையின் குறிப்புகளுடன் எனக்கென்று ஒரு நறுமணத்தை விரும்பினேன். அதன்படி, எனது முன்னாள் மற்றும் தற்போதைய காதலன் இருவரின் கூற்றுப்படி, இந்த வாசனை திரவியம் கவர்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது” என்றார். அவர் 2021ஆம் ஆண்டில் மற்ற பெண்களுக்காக தனித்துவமான வாசனை திரவியத்தை உருவாக்கினார், இதனால் அவர்கள் கவனத்தை எழுப்பவும், ஆண்களை ஆர்வத்தை தூண்டவும் பயன்படுத்த முடியும் என்கிறார்.
“மாண்டரின் ஆரஞ்சு, பெர்கமோட் மற்றும் இளஞ்சிவப்பு மிளகு ஆகியவற்றின் பழ குறிப்புகள் தவிர, எனது வாசனை திரவியத்தில் ஒரு சிறப்பு, என் வியர்வை. இது ஆர்வமும் மர்மமும் கலந்த கலவையாகும். ‘Fresh Goddess’ என்று பெயரிடப்பட்ட வாசனை திரவியத்தின் ஒவ்வொரு பாட்டிலிலும் அவரின் 8 மில்லி வியர்வையைச் சேர்க்கிறார். இது “டேட்டிங்கிற்கு உகந்த வாசனை திரவியம்” எனவும் வனேசா கூறினார்.மேலும், “எனது இயற்கையான வாசனை ஆண்களை கவர்ந்திழுக்கிறது, அதனால் நான் என் வியர்வையின் துளிகளை வாசனை திரவியத்தின் நறுமணத்திற்கு முக்கியமான ஒன்றாக பயன்படுத்தினேன். காதல் மற்றும் பாலியல் சார்ந்த இந்த வாசனை திரவத்திற்கான சூத்திரத்தில் எனது வியர்வை மிக முக்கியமான மூலப்பொருளாகும்.
என் சமூக வலைதள பாலோயர் ஒருவர், இந்த வாசனை திரவியத்தின் வாசனை சக்தி வாய்ந்தது, அது வாக்குறுதியளிப்பதை நிறைவேற்றுகிறது என்று கூறினார். என் வியர்வையின் துளிகள், இந்த வாசனை திரவியத்திற்கு சிற்றின்பத்தையும் பெண்மையையும் தருகின்றன என்றும் அந்த பாலோயர் சொன்னார்” என்றார். அந்த பெண் பாலோயரின் கழுத்தில் இருந்து எழுந்த அந்த வாசனையை அடுத்து ஒரு ஆண் அந்த பாலோயரோடு காதலில் விழுந்ததாக வனேசா கூறினார். மேலும், அவர்கள் டேட் செய்ய ஆரம்பித்து வெறும் இரண்டு நாள்களில் காதலில் விழுந்துவிட்டதாகவும் கூறினார்.