fbpx

‘பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லை’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்..!!

பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில், விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு சென்ட் நிலம் வைத்து இருந்தாலும், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அது உங்களது தான் என்று சொல்லும் துறைதான் வருவாய்த்துறை. சான்றிதழ்கள் வழங்குவது பெரிய பணி என்று தெரிவித்தார். ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் 4,65,000 சான்றிதழ் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாவும், முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், தற்போது 785 சான்றிதழ் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என்றும், 7 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்பதோடு, தந்தை பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்றும், இப்போது அனைவருக்கும் பட்டா கொடுக்கவுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார். 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டதாவும், இதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்யுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறினார்.

Chella

Next Post

"எங்க வயித்துல அடிக்காதிங்க...." பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகள் அகற்றம்! காவல்துறை அராஜகம்!

Wed Apr 12 , 2023
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈசென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்றன. இதில் ஏராளமான மீனவர்கள் கடையமைத்து தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் […]

You May Like