கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசி வருவதையடுத்து பெட்ரோலை கேன்களில் விற்பனை செய்யக்கூடது என்று மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை , ராமநாதபுரம் , உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகள் , பாஜவினர். , நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகின்றது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை முடிவுக்கு கொண்டுவர விருதுநகரில் பெட்ரோல்களை கேனில் விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுசம்பவங்கள் நடக்கவில்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு வீசுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.