fbpx

Exam: இன்றுடன் நிறைவடையும் பிளஸ்-2 பொதுத்தேர்வு!… ஏப்ரல் 1-ல் விடைத்தாள் திருத்தம்!… முடிவுகள் எப்போது?

Exam: பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 22) நிறைவு பெறுகிறது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. இன்றுடன் (மார்ச் 22) பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவு பெறுகிறது. நிறைவு நாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜவுளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு முடிந்ததும் மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத்தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-ல் வெளியிடப்படும். திருத்துதலின் போது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: Stalin: அனல்பறக்கும் தேர்தல் களம்!… இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

Kokila

Next Post

இந்தியாவை அச்சுறுத்தும் RANSOMWARE இணைய தாக்குதல்கள்.!! ஷாக்கிங் ரிப்போர்ட்.!!

Fri Mar 22 , 2024
RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சைபர் கிரிமினர்களால் அதிக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் […]

You May Like