fbpx

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா……! நாடாளுமன்றம் முழுவதும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு…..!

டெல்லியில் கடந்த 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணிக்கு தொடங்கியது.

ஆனாலும் அதற்கு முன்னதாகவே பாரம்பரிய சடங்குகள் இன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. இதற்காக புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காலை 7.15 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் வருகை தந்தார்.

இதற்க்கிடையே நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி உட்பட அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர் பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்குள் பிரவேசித்த போது அமைச்சர்கள் பலத்த கரகோஷங்களுடன் வரவேற்பு வழங்கினர்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவைத்தலைவர் உரையாற்றினார்.

Next Post

நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் சதவீதம் 0.01 சதவீதமாக இருக்கிறது……! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…..!

Sun May 28 , 2023
நாட்டில் புதிதாக 403 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4972 ஆக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, நாட்டில் இதுவரையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,864 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்றுக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் […]

You May Like