fbpx

DMK: பரபரப்பில் அரசியல் களம்!… இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!… தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளரள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆலோசனை கூட்டமானது காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும், நாடாளுமன்றத் தொகுதி பார்வையாளர்களும், அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழுக்களை அமைத்தது திமுக. தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.இராஜா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழக முழுவதும் சென்று மக்களிடம் கருத்த்துக்களை சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கிய சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சென்னையில் மக்களிடம் கருத்த்துக்களை கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary:District secretaries meeting today

Readmore:மக்களே குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Kokila

Next Post

மாசி பௌர்ணமி வழிபாடு : அரசியல் அதிகாரம், பதவி உயர்வு கிடைக்க இந்த வழிபாடு பண்ணுங்க.!?

Fri Feb 23 , 2024
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மாசி மாதத்தை மகத்துவமான மாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாசி மாதத்தில் இன்று பௌர்ணமி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. எனவே மாசி மாத பௌர்ணமியில் வழிபாடு செய்தால் அரசியல், அதிகாரம், பதவி உயர்வு என பல நன்மைகள் கிடைக்கும். அனைத்து விதமான செல்வங்களும் உயர் பதவிகளும் கிடைப்பதற்கு இந்த பௌர்ணமி வழிபாடு செய்வது நல்லது. பௌர்ணமி நாட்களில் துர்க்கை அம்மனுக்கு […]

You May Like