fbpx

பொங்கல் விடுமுறை எதிரொலி!… இன்றுமுதல் கூடுதல் டோக்கன்!… பதிவுத்துறை அதிரடி உத்தரவு!

பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை காரணமாக இன்றுமுதல் வரும் 31ம் தேதிவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, 3 அல்லது 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களில், இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சில சிறப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் அதிகளவு ஆவணங்கள் பதிவுக்கு வரும் என்பதால், ஜனவரி 17-ந் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், இன்றுமுதல் (ஜனவரி 18 முதல் 31-ந் தேதி) வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் இந்த டோக்கன்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 2 சார்ப்பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் 12 தட்கல் டோக்கன் முறை அடுத்த நாட்களில் 20-ஆக உயர்த்த வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களா.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!?

Thu Jan 18 , 2024
பொதுவாக நம் உடலில் ஏற்படும் தலைவலி, கால் வலி, உடல் வலி போன்ற பல்வேறு வலிகளுக்கும் வலி நிவாரணி மாத்திரைகளான பாரசிட்டமால், டோலா 650, ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு […]

You May Like