குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு எச்சரித்துள்ளதோடு, குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “இந்திய இணையதளத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்க முடியாது. அவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79-வது பிரிவின் கீழ் அவர்களின் Safety Harbour திரும்பப் பெறப்படும். இதுதொடர்பாக சமூக ஊடகங்களான யூடியூப், ட்விட்டர் (X) மற்றும் டெலிகிராம் ஆகியவற்றிற்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.