fbpx

இன்று முதல் நாடு முழுவதும் தபால் நிலையங்கள் இயங்காது..!! பொதுமக்கள் கடும் அவதி..!!

இன்று முதல் நாடு முழுவதும் தபால் நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் நாடு முழுவதும் தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கிராமிய ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பணி நிரந்தரப்படுத்தவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாகத் தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Chella

Next Post

இந்தியாவில் மழைநீரை சேமிக்க செயல் திட்டம்..‌.! மத்திய அரசு விளக்கம்

Tue Dec 12 , 2023
தண்ணீர் ஒரு மாநில விவகாரம் தொடர்புடையது என்பதால், மழைநீரைச் சேமிப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது. இருப்பினும், ஜல் சக்தி அமைச்சகம் “ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்”-2023 என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இது ஜல்சக்தி திட்டங்களின் வரிசையில் நான்காவது முறையாகும், இது குடியரசுத் தலைவரால் 04.03.2023 அன்று நாட்டின் […]
புரட்டி எடுக்கும் கனமழை..!! வரும் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

You May Like